மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் கனடா வீரர் பெலிக்ஸ் யூஜே அலியஸ்ஸிம் உடன் (23 வயது, 20வது ரேங்க்) மோதிய ருப்லேவ் (26 வயது, 6வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய அவர் 7-5, 7-5 என அடுத்த 2 செட்டையும் கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டார்.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது. ருப்லேவ் வென்ற 2வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன் பட்டம் இது. கடந்த ஆண்டு அவர் மான்டி-கார்லோ தொடரில் பட்டம் வென்றிருந்தார்.