Friday, May 17, 2024
Home » மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் தகராறு சக நண்பனுக்கு சரமாரி வெட்டு: சோமங்கலம் அருகே பரபரப்பு

மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் தகராறு சக நண்பனுக்கு சரமாரி வெட்டு: சோமங்கலம் அருகே பரபரப்பு

by Karthik Yash

ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமங்கலம் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (22). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு சோமங்கலம், பஜனை கோயில் தெருவில், அதே பகுதியை சேர்ந்த சக நண்பர்களுடன் மது குடித்துள்ளார். அப்போது, சக நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த சக நண்பர்கள் 5 பேரும், லோகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். லோகேஷின் அலறல் சத்தம்கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலத்த காயமடைந்த லோகேஷை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயமடைந்த லோகேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவானவர்களை கைது செய்யப்பட்ட பின்னரே முன்விரோதம் காரணமாக லோகேஷை வெட்டினார்களா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

18 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi