சென்னை: மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பிரகாஷ் நகர்-பொன்னியம்மன் மேடு மற்றும் வேலம்மாள் நகர்-சூரப்பட்டு ஆகிய மயான பூமிகளில் புதிதாக LPG எரிவாயு தகனமேடைகள் கட்டப்பட உள்ளதால், பொதுமக்கள் நேர்மை நகர் மற்றும் புழல் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-29ல் உள்ள பிரகாஷ் நகர்-பொன்னியம்மன் மேடு இந்து மயானபூமி மற்றும் வார்டு-32ல் உள்ள வேம்மாள் நகர்-சூரப்பட்டு இந்து மயானபூமி ஆகியவற்றில் புதிதாக LPG எரிவாயு தகனமேடைகள் கட்டப்பட உள்ளதால், 12.02.2024 முதல் 11.08.2024 வரை ஆறு மாத காலத்திற்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது.
எனவே, மேற்கண்ட பணிகள் நடைபெறும் 12.02.2024 முதல் 11.08.2024 வரையிலான காலத்திற்கு பொன்னியம்மன் மேடு பகுதி பொதுமக்கள் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-66க்குட்பட்ட நேர்மை நகர் இந்து மயானபூமியையும், சூரப்பட்டு பகுதி பொதுமக்கள் வார்டு-24க்குட்பட்ட புழல் இந்து மயானபூமியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.