Friday, May 10, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: செயற்குழு கூட்டத்தில் எம்எல்ஏ சுந்தர் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: செயற்குழு கூட்டத்தில் எம்எல்ஏ சுந்தர் பேச்சு

by Karthik Yash

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின், பிறந்தநாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, கோகுலக்கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைத்து நிர்வாகிகளும் உழைத்திட வேண்டும். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் பிறந்தநாள் அன்று காஞ்சிபுரம், மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க உள்ளோம். மேலும், காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பிக்குமாறு இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம்தேதி அனைத்து கிளை கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடி, அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், நலத்திட்ட உதவிகள், அறுசுவை விருந்து அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாட உள்ளோம். திமுக கட்சி சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பங்கேற்கிறார். ஆயிரக்கணக்கில் அணி திரள்வோம், மாநில உரிமையை மீட்கும் தலைவரின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், தேர்தல் பொறுப்பாளர்கள் சுபேர்கான், பாஸ்கர்சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சத்திய சாய், சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், சுந்தரமூர்த்தி, எழிலரசன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவராமன், ராஜா ராமகிருஷ்ணன் மாலதி செல்வராஜ், மாணவர் அணி துணை அமைப்பாளர் சரளா தனசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆண்டோ சிரில் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

16 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi