சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லுலு மால் வருகிறது என்பது முற்றிலும் வதந்தி என்று அரசு தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்து விட்டு அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த் தகவலை உண்மை என்று நம்பி அரசியல் கட்சியினர் சிலரும் தனிநபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்திரிக்கப்பட்டது. ஆதரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.