சென்னை: சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு செல்ல வேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்தால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.