லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் லக்னோ – குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா – சஹா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். தொடக்க ஆட்டக்காரரான சஹா 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ருணால் பாண்டியா ஓவரில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தபோது ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி தரப்பில் க்ருணால் பாண்டியா மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் மட்டுமே நிலைத்து ஆடி 68 ரன்கள் எடுத்தார்.