லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உடையில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டதில் தாதா சஞ்சீவ் ஜீவா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பாஜக பிரமுகர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவல் அதிகாரிகள் சிவில் கோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.