Thursday, May 9, 2024
Home » வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பு: கிலோ வண்ண குடமிளகாய் ரூ.220; இஞ்சி ரூ.260, பூண்டு ரூ.200; உணவகங்களில் விலை உயர்வு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பு: கிலோ வண்ண குடமிளகாய் ரூ.220; இஞ்சி ரூ.260, பூண்டு ரூ.200; உணவகங்களில் விலை உயர்வு

by Karthik Yash

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உணவகங்களில் விலை உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலை கடந்த ஒருவாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை மார்க்கெட்டுக்கு 450 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.260க்கும், பூண்டு ரூ.200க்கும், பீன்ஸ் ரூ.110 க்கும், பச்சைமிளகாய் ரூ.90க்கும், வண்ண குடமிளகாய் ரூ.220க்கும், பட்டாணி ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கும், வெங்காயம் 20க்கும் சின்ன வெங்காயம் ரூ.80க்கும், உருளைகிழங்கு ரூ.35க்கும் முள்ளங்கி ரூ.40க்கும் முட்டைகோஸ் ரூ.20க்கும் கத்திரிக்காய் ரூ.40க்கும், காராமணி ரூ.60க்கும், சவ்சவ் ரூ.25க்கும் புடலங்காய் ரூ.30க்கும், சுரக்காய் ரூ.35க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், முருங்கைக்காய் ரூ.30க்கும் சேனை கிழங்கு ரூ.40க்கும் காலிபிளவர் ரூ.30க்கும், அவரைக்காய் ரூ.80க்கும், பீர்க்கங்காய் ரூ.50க்கும், நூக்கல் ரூ.35க்கும், கொத்தவரங்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 ல் இருந்து ரூ.150க்கும் இஞ்சி ரூ.300க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் பட்டாணி ரூ.210 க்கும் பச்சை மிளகாய் ரூ.110 க்கும் வண்ண குட மிளகாய் ரூ.240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுசம்பந்தமாக கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘ வரத்து குறைவால் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ் இஞ்சி, வண்ண குடமிளகாய், பட்டாணி விலை அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று காலை 450 வாகனங்களில் 5,000டன் என்ற அளவில் குறைவான காய்கறிகள் வந்ததுள்ளன. இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகள் விலை உயர்வு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும். அடுத்த மாதம் காய்கறிகள் விலை படிப்படியாக குறையும்.’’ என்றார்.

You may also like

Leave a Comment

three + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi