Thursday, May 16, 2024
Home » காதல் ஜோடியிடம் செயின் பறித்த போலீஸ்காரர்

காதல் ஜோடியிடம் செயின் பறித்த போலீஸ்காரர்

by Karthik Yash

தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்துள்ளது. இதனை மர்ம நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அவர் காதலர்களிடம் சென்று அந்த வீடியோவை காண்பித்து, அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும் அதனை அழிக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
காதல் ஜோடியிடம் பணம் இல்லாததால் பெண்ணிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க செயினை பறித்துவிட்டு வீடியோவையும் அழிக்காமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் மறுநாள் தனது நண்பர்களுடன் சேர்ந்த அந்த மர்ம நபரை தேடி அழைந்துள்ளார். விசாரணையில் திருட்டு பைக்கில் வந்து செயினை பறித்துச் சென்ற நபர் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் என்பதும், 2021ல் பணிக்கு சேர்ந்து தற்போது பட்டாலியனில் பணியாற்றி வரும் அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi