Sunday, June 16, 2024
Home » காதல், டேட்டிங் விவகாரத்திற்கு மத்தியில் திருமணமாகாமல் கர்ப்பமான நடிகை இலியானா: கணவரின் பெயரை கேட்கும் நெட்டிசன்கள்

காதல், டேட்டிங் விவகாரத்திற்கு மத்தியில் திருமணமாகாமல் கர்ப்பமான நடிகை இலியானா: கணவரின் பெயரை கேட்கும் நெட்டிசன்கள்

by MuthuKumar

மும்பை: காதல், டேட்டிங் விவகாரத்திற்கு மத்தியில் நடிகை இலியானா டி குரூஸ் கர்ப்பமாகி உள்ளதால், அவரது கணவரின் பெயரை தெரிவிக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றின் முதல் புகைப்படத்தில் ‘சாகசம் தொடங்குகிறது’ என்று எழுதப்பட்ட ஒரு டி-ஷர்ட்டின் படம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது புகைப்படத்தில், ஒரு செயினில் பதக்கம் உள்ளது. அதில் மாமா என்று எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவின் கேப்ஷனில், ‘மிக விரைவில்… உங்களைச் சந்திக்க வேண்டும். என்னால் காத்திருக்க முடியவில்லை… லிட்டில் டார்லிங்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை தொடர்ந்து, பலரும் பலவித கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இலியானா விரைவில் குழந்தைக்கு தாயாக உள்ளார் என்றும், அதற்காக அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர், குழந்தையின் தந்தை யார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில், இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இருந்தும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக்காரர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை இலியானா காதலித்து வந்தார். அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. இருப்பினும், 2019ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலுடன் இலியானா டேட்டிங் செய்வதாகவும் பேசப்பட்டது. ஆனால் தாங்கள் டேட்டிங்கில் இருப்பதாக இருவர் தரப்பிலும் எதுவும் கூறப்படவில்லை. இந்த நிலையில் இலியானா கர்ப்பமான செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi