தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் சின்னம், கொடி, தலைவர்கள் சிலைகளை மூடிய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மற்றும் பாஜவுக்கு ஆதரவான போஸ்டர்கள், சின்னங்களை அகற்றவில்லை, மறைக்கவில்லை. நடத்தை விதிகளை மீறி தனது சின்னத்தை ரயில்வே மூலம் பாஜ பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. ரயில் டிக்கெட்டை பதிவு செய்ததால் அந்த டிக்கெட்டில் பாஜவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பாஜ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.