Wednesday, May 1, 2024
Home » வசூல் தொகையை கேட்டதால தாமரை தலைவர் வேட்பாளர் கொந்தளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வசூல் தொகையை கேட்டதால தாமரை தலைவர் வேட்பாளர் கொந்தளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘தாமரை முகாமின் சவாலை தலைவரு முறியடிச்சாருன்னு சிலிர்த்துக்கிட்டாங்களாமே..’’ ‘‘பிரசாரத்தின் நிறைவு நாளில், சவாலை முறியடிச்சாரு சேலத்துக்காரருன்னு ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே சிலாகித்துக்கிட்டாங்களாம்.. டெல்லி தலைவரின் ரோடு ேஷாவை, சமீபத்தில் சேலத்துக்காரரான இலைக்கட்சியின் பொதுச்செயலாளரு கிண்டல் அடிச்சாரு.. இப்படி ரோடு ஷோ நடத்துவதால், தமிழ்நாட்டு பப்ளிக்ைக ஏமாத்த முடியாதுன்னு ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தாரு..

இதனால் கடுப்பான பிரதர் மவுண்டன், அவரெல்லாம் ஓரிடத்தில் கூட்டத்தை கூட்டி வச்சு பேசுறவரு. பப்ளிக் மத்தியில் வலம் வர தில்லு இல்லாதவருன்னு கடுப்பானாரு.. இந்நிலையில்தான், சொந்த ஊரில் ரோடு ஷோ காட்டி, இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செஞ்சாராம்.. முதலில் அவரது பிரசார பட்டியலில் இப்படி ஒரு பிளானே இல்லையாம்.. பிரதர் மவுண்டன் சீண்டினதுக்கு அப்புறம் தான், ரோடு ஷோ நடத்தணும்னு பொறி தட்டிச்சாம். இதன் பிறகே, மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை திரட்டி ரோடு ஷோ நடத்தியிருக்காரு..

இதை லைவாக ஒளிபரப்பிய அவுங்க கட்சி டிவி, இது தான் ரியல் ரோடு ஷோன்னு மொத்த எழுத்தில் டைட்டில் போட்டு, தாமரை முகாமிற்கு கடுப்பை ஏத்திக்கிட்டே இருந்ததாம்.. நம்ம லீடரு சவாலை எப்படி முறியடிச்சாரு பாத்தீங்களான்னு ஷோவில் பங்கேற்ற நிர்வாகிகள் ரொம்பவே சிலிர்த்துக்கிட்டே நடந்தாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அப்புறம் இலைக்கட்சி வேட்பாளர் ஒருத்தர் திடீரென சைலண்டா மாறிட்டாராமே’’ என பரபரப்புடன் கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.

‘‘ஆமா.. சின்ன மாவட்டத்தில் இலைக்கட்சி வேட்பாளராக இரண்டு பெயர் கொண்டவர் போட்டியிடுகிறார். இவரை வேட்பாளரா அறிவித்ததில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.. பிரசாரத்தின்போது கூட கட்சியினர் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம்.. இதுதொடர்பா தலைமையின் கவனத்துக்கு வேட்பாளர் கொண்டுசென்றிருக்காரு… ஆனாலும் அங்கிருந்து எந்தவித ரியாக்‌ஷனும் வரவில்லையாம்.. அப்படியென்றாலும் மனம் தளராத வேட்பாளர் எதையும் காட்டிக்கொள்ளாமல் இறுதிக்கட்ட பிரசாரம் வரையிலும் சுறுசுறுப்புடன்தான் காணப்பட்டாராம்….

ஆனால் பிரசாரத்திற்கு பிறகு திடீரென வேட்பாளர் ரொம்பவே சைலண்டாக இருந்து வருகிறாராம்.. கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் கூட பேசவில்லையாம்.. அவர்களை சந்திப்பதைக்கூட தவிர்த்து வருகிறாராம்.. வேட்பாளரின் இந்த திடீர் சைலண்ட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்தும், வீட்டிலேயே முடங்கி கிடப்பதும் நிர்வாகிகளாலும் கண்டுபிடிக்க முடிய வில்லையாம்.. இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு பின்னர் இலைக்கட்சி வேட்பாளர் திடீரென சைலண்டாக இருக்கும் மர்மம் பற்றிதான் கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேச்சு ஓடிக்கிட்டு இருக்கிறது… என்றார் விக்கியானந்தா.

‘‘பூட்டு மாவட்ட தொகுதியில் இலைக்கட்சியின் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளருக்கு ஆதரவாக இலைக்கட்சியின் உளறல் புகழ் மாஜி அமைச்சர், மாஜி ஷாக் அமைச்சர் பெயரளவில் வேலை பார்த்து கணக்கு காட்டியுள்ளனர். பிரசார வேலையை துவங்கும்போதே இரு மாஜிக்களும் தங்கள் ஆதரவாளர்களிடம், ‘எதையும் எதிர்பார்த்து வராதீர்கள். எங்களிடம் எதுவும் இல்லை’ என கறாராக கூறிவிட்டனராம். இதனால், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கூட்டணி வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினாங்களாம்..

மற்றபடி இலைக்கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லையாம்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டிக்கு சென்றவர்களுக்கு குறிப்பிட்டளவு தொகை வழங்கப்பட்டதால், பலரும் இம்முறை ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், உளறல் மாஜி அமைச்சர் பொறுப்புள்ள பகுதியில் சட்டமன்ற தேர்தலில் கொடுத்ததில் பாதிக்கும் குறைவான தொகையை, ஒட்டுமொத்தமாக கமிட்டியிடம் கொடுத்துள்ளனர். இதனால் பூத் கமிட்டி பணிக்கு செல்ல இருந்த இலைதரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த மற்றொரு இலைத்தரப்பு, இங்கே பரவாயில்லை. மாஜி ஷாக் அமைச்சர் பொறுப்புள்ள பகுதியில் எதுவுமே கொடுக்காமல் கையை விரித்து விட்டார். இதனால், பூத் கமிட்டி பணிக்கு போவதா, வேண்டாமா என அங்குள்ளவர்கள் குழம்பி போய் இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வசூல் தொகை என்னாச்சுன்னு நிர்வாகி கேட்டதை கேட்டு கொதித்து போயிட்டாராமே தாமரை தலைவர் வேட்பாளர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் பூத் கமிட்டி அமைத்து, அந்த பூத் கமிட்டியின் அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் கொடுப்பது வழக்கம். அதாவது, சாப்பாட்டு செலவு, பெட்ரோல் செலவு, துண்டு நோட்டீஸ் செலவு, லேபிள், பேட்ஜ் செலவு என சின்னச் சின்ன செலவினங்களுக்கு இவை பயன்படுத்தப்படும். வேட்பாளரின் வசதிக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்.

குறைந்தபட்சம் ஒரு பூத்துக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், கோவை தொகுதி தாமரை கட்சி வேட்பாளர் இதுபற்றி கண்டுகொள்ளவே இல்லையாம்.. தொகுதியில் உள்ள 2,059 பூத்களில், ஒரு பூத்துக்குகூட பணம் கொடுக்கவில்லையாம். வெறுத்துப்போன கட்சி நிர்வாகிகள் சிலர், ‘அண்ணே பூத் கமிட்டிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கணும்…, ஏற்பாடு செய்யுங்க…’ என வேட்பாளரிடம் கேட்க, அவரோ, ‘மேலிடத்தில் இருந்து வந்தால் கொடுக்கலாம்…’ என ஒரு வரியில் பதில் கூறிவிட்டு நழுவிவிட்டாராம்..

கடைசி நாளில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் பிரசாரம் செய்தபோது, ஒரு நிர்வாகி, சற்று கோபத்துடன், ‘அண்ணே வசூல் பணம் நிறைய வந்ததே… அதெல்லாம் என்னாச்சு…?’ என கேள்வி கேட்க, வேட்பாளர் கொதித்துவிட்டாராம்.. அவரை, அருகில் இருந்த மாவட்ட தலைவர் மற்றும் ஒரு பெண் நிர்வாகி ‘ஆப்’ செய்திருக்காங்க.. ‘ஆட்டைய போடுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா….? என்னா… ஒரு தில்லுமுல்லு…’ என தாமரை கட்சியினரே புலம்புகின்றனர்.. என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

17 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi