Sunday, September 1, 2024
Home » பிரபல நடிகையின் பிரசாரத்துக்கு ஆளை சேர்ப்பதாக கூறி லட்சங்களை லவட்டிய தாமரை நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பிரபல நடிகையின் பிரசாரத்துக்கு ஆளை சேர்ப்பதாக கூறி லட்சங்களை லவட்டிய தாமரை நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘வாய்ப்பு கொடுக்காம ஏமாத்திட்டாங்களாம், அதனால கட்சிய விட்டு போய்ட்டாராம்னு சொல்றாங்களே.. அதுல வேற விவகாரம் இருக்கோ..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புற ஏஜென்சி நடத்திட்டு வர்றாராம் ஒருத்தரு. அவரு தான், இலை கட்சியில மதர்பேரவை டிஸ்ட்ரிக்ட் செக்ரட்ரியாகவும் இருந்திருக்காரு. அதோட இவர் மாஜி மந்திரி வீரமானவரோட பி, னாமி என்று அந்த கட்சிக்காரர்களால் கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில உள் ஆட்சி எலக்‌ஷன்ல, இலை சார்புல பள்ளி என்று முடியும் ஒன்றியத்துல, தலைவராக போட்டி போடுவதற்கு வாய்ப்பு கேட்டாராம். ஆனா, மாஜி மந்திரி அதுக்கு சிகப்பு கொடி காட்டிட்டாராம். இந்த நிலையில நடக்கப்ேபாற நாடாளும் மன்றத்தோட எலக்‌ஷன்ல, உறுப்பினராக போட்டி போடவும் விருப்ப மனு கொடுத்தாராம். அதுக்கும் சிவப்பு கொடி காட்டி, வாய்ப்பு தராம ஏமாத்திட்டாங்களாம். இதனால விரக்தியடைஞ்ச மதர் பேரவை செக்ரட்ரி, தன்னோட பதவியில இருந்து விலகி மலர் கட்சியில இணைஞ்சிட்டாராம்.

இதனால மாஜி மந்திரியான வீரமானவர் ஷாக் ஆகிட்டாராம். போன வருஷம் மாஜி மந்திரி வீட்ல ஐடி ரெய்டு நடத்தப்போ, மதர்பேரவை மாஜி செக்ரட்ரி வீட்டிலயும் ரெய்டு நடத்துச்சாம். ஆனா, இப்ப கட்சி மாறிட்டாராம். இதுக்கு காரணம், அவருக்கும், அவரை சார்ந்தவங்களுக்கும் முக்கியமான சர்டிபிகேட்டை மாத்தி கொடுக்குறேன்னு யாரோ வாக்குறுதி கொடுத்துட்டாங்களாம். அதனால மலர் கட்சியில சேர்ந்துட்டாருன்னு இலைகட்சியில பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எங்க பிழைப்பில் மண் அள்ளிப்போட்டுட்டங்கன்னு பழம் தின்னு கொட்டை போட்ட அதிகாரிகள் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி தேர்தல் சார்ந்த அலுவல்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு, பொருட்கள் கொள்முதல் போன்றவற்றில் சில அதிகாரிகள் புகுந்து விளையாடுவது வழக்கம். இதில் பல லட்சங்களை அவர்கள் சம்பாதித்து விடுவார்களாம். குறிப்பாக வாடகை வாகனங்கள் பணியமர்த்துவதில் இது நடைபெறும்.

ஆனா, இந்த முறை மின்னணு இயந்திரங்களை கொண்டு செல்லும் கூண்டு வாகனங்கள் ஒதுக்கீட்டில் புதிய முறையை பின்பற்றியுள்ளார்களாம். தென்கோடி மாவட்டங்களுக்கு கூட மதுரையை மையமாக கொண்டு இயங்குகின்ற வாகனங்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இதற்காக ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் உள்ளூரில் பழம் தின்று கொட்டை போட்ட அதிகாரிகள் இப்படியா எங்களின் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது? என்று புலம்பி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முன்தொகை தந்தும் கூட்டம் சேர்க்காததால் மலர் கட்சி பிரபலம் கடிந்து கொண்டதை சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘மெடல் நகர் தொகுதியில் தாமரையில் களமிறங்கியுள்ள நடிகை பிரபலம், தூங்கா நகர் மாவட்டத்தின் முதல்படை வீடு தொகுதிக்குள் பிரசார பயணம் மேற்கொண்டதில் படு அப்செட்டாம். இந்த பகுதியில் பிரசாரத்துக்குச் சென்ற ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 200 பேரையாவது திரட்டுவதாக மாவட்ட பொறுப்பில் உள்ள அப்பன் பேர் கொண்டவர் பல்வேறு பிரசார இடங்களை கணக்கில் காட்டி லட்சக்கணக்கில் பணம் கல்லா கட்டிவிட்டாராம்.

பிரசாரம் துவக்கிய முதலிடத்தில் மட்டும் நூறு பேருக்குள் கொண்டு வந்து நிறுத்தி, கணக்கு காட்டி விட்டு மற்ற இடங்களில் எல்லாம் முப்பது நாற்பது பேர்கள் கூட இல்லையாம். இவ்வளவு முன்தொகை தந்தும் கூட்டம் சேர்க்காததால், ‘என்ன கூட்டமே இல்லை’ என பிரபலம் கடிந்து கொண்டாராம். மேலும் தலைமைக்கும் தகவல் கொடுத்துள்ளாராம். இப்படியே போனால் தாமரை காய்ந்து விடும் என தொகுதி மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்..’’ என்று விவரித்தார் விக்கியானந்தா. ‘‘3 மணி நேரம் தாமதமாக வந்த மாநில தலைவர் மீது உச்சகட்ட கோபத்தில இருக்காங்களாமே தாமரை நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர தொகுதியில் தாமரை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடைசி எழுத்தில் முடியக்கூடிய கோவிந்த் என்பவரை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் காலை 11.30 மணியளவில் பிரசாரம் செய்ய வருகை தருவதால் கூட்டம் அதிகம் அளவில் காட்ட வேண்டும் என முதல்நாளே மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தலைமையிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதற்காக நெற்களஞ்சியம், மனுநீதி சோழன் மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களுக்கு ‘வைட்டமின் ப’ கொடுத்து காலை 11 மணிக்கே வாகனங்களில் அழைத்து வரப்பெற்றனர்.

ஆனால் குறிப்பிட்டப்படி 11.30 மணிக்கு மாநில தலைவர் கூட்டத்திற்கு வரவில்லையாம்…. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருவதாக தாமரை பொறுப்பாளர்களுக்கு தகவல் வந்தது. இதனால் மனுநீதி சோழன் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கூட்டணி கட்சியினர், எங்களை காக்க வைப்பதே இவருக்கு வேலை என மாநில தலைவர் மீது உச்சகட்ட கோபத்துக்கு ஆளாகி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்களாம்… இதில் வேற பசி மயக்கத்தில் காத்திருந்த தொண்டர்களும் மாநில தலைவரை திட்டியபடி அங்கிருந்து நடையை கட்டினர்.

பிற்பகல் 2.50 மணிக்கு வந்த மாநில தலைவர், ஆளுங்கட்சி பற்றியும், அதன் அமைச்சர்கள் பற்றியும்தான் 1 மணி நேரம் பேசினாராம்… ஆனால் இலைகட்சி தலைவர்களை பற்றியோ, இலைகட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியோ ஒரு வரி கூட பேசவில்லை. சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பராமால் தாமரையுடன் கூட்டணி வைத்துள்ள நிர்வாகிகள் இலை கட்சி குறித்து மாநில தலைவர் பேசுவார் என காத்திருந்தனர். ஆனால் தாமரையும், இலையும் கள்ள கூட்டணியை நிரூபிக்கும் வகையில் மாநில தலைவர் எதுவும் பேசாமல் சென்று விட்டாரே என தாமரை நிர்வாகிகள் தங்களுக்குள் புலம்பி சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi