புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக பைஜூஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜூ ராஜேந்திரன் மீது அமலாக்கத்துறை வாக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் மீண்டும் திருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படுகின்றது.