சென்னை: மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. மதிமுக பம்பரம் சின்னம் கோரியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது. திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தனர். தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து சின்னத்துடன் திமுக கூட்டணிக்கு திருச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.