மதுரை: மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடாதது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மட்டுமின்றி பாஜகவுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி உள்ளதாக டிடிவி தினகரன் மதுரையில் பிரச்சாரம் செய்தார்.