டெல்லி: மோடி அரசின் கொள்கையால் 20% ஏழைகள் விலைவாசி உயர்வால் பாதிப்படைகின்றனர் எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலைவாசி உயர்வு கூறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் எனவும் காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டி மக்கள் நிச்சயம் பழி தீர்ப்பார்கள் என கார்கே தெரிவித்துள்ளார்.