சேலம்: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் என பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் பாஜகவுடன் கூட்டணி என்பது ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சேர்ந்து எடுத்த முடிவு எனவும் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.