டெல்லி : மக்களவையில் அத்துமீறி நுழைந்து மர்மபொருள் வீசிய இருவருக்கு, மைசூரு பாஜக எம்.பி ப்ரதாப் சிம்ஹா, பார்வையாளர் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மைசூரு பாஜக எம்.பி ப்ரதாப் சிம்ஹா பரிந்துரை அடிப்படையில் அனுமதிச் சீட்டுடன் வந்தவர் சாகர் சர்மா என்றும் தகவல் கிடைத்துள்ளது.