டெல்லி: மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகோய் கொண்டுவந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கபட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த தலைவர்கள், திமுக, உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டனி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகோய் மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. முடிவில், கவுரவ் கோகோய் கொண்டுவந்த அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்க்கு ஆதரவு கொடுப்பதாக முடிவு செய்யபட்டுள்ளது.
மேலும் மக்களவை தொடங்கியதும் தலைவர் இந்த நோடீஸை வாசித்தால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு கொடுப்போம் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.