சென்னை: மக்களவை தேர்தலில் வாளி, பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பெயரில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தனக்கு சுயேச்சை சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.