Monday, May 20, 2024
Home » செங்கல்பட்டில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்

செங்கல்பட்டில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்

by Mahaprabhu

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஒரு புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அந்த புறக்காவல் நிலையத்தை சீரமைத்து மீண்டும் இயங்குவதற்கு மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அண்ணாநகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், அண்ணாநகர் பகுதியில் புதிதாக ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் ஒரு தலைமை காவலர் உள்பட போலீசார் பணியில் அமர்த்தப்பட்டதால், அங்கு குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அண்ணாநகரில் உள்ள புறக்காவல் நிலையம் போதிய காவலர்கள் இன்றி பூட்டியே கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் மீண்டும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகரில் மீண்டும் புறக்காவல் நிலையம் முறையாக இயங்குவதற்கு, அக்கட்டிடத்தை சீரமைத்து, அங்கு போதிய காவலர்களை நியமித்து குற்றச் சம்பவங்களை நடைபெறுவதை தடுக்கவும் அங்கு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

3 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi