மதுரை: மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ள நாட்களில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நாகர்கோவில் காசி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நாட்களில் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிபிசிஐடி போலீசார் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.