மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினரை பொதுமக்கள் பின்தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம். ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்றிரவு வனத்துறையினரை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் தேடுதல் பணி கடும் பாதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.