மதுரை: நிலமோசடி விவகாரத்தில் கணவருக்கு உதவிய ஆய்வாளர் சொர்ணலதாவை பணியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி ஆய்வாளர் சொர்ணலதாவை பணியில் இருந்து நீக்கி டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டார். வழக்கறிஞரான கணவருடன் சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சொத்துகளை முறைகேடாக பெயர் மாற்றிய வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.