சென்னை: நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை பெண்கள் எரித்து எதிர்ப்பை காட்டினர்.