தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காரில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலிஸ் கைது செய்தனர். மடத்து தெரு பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி சந்திரசேகரன் என்பவரின் காரில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த செந்தில்குமார், சுரேஷ், செல்வகணபதி, சசிகுமார், விஷ்வா, சாந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானோரிடமிருந்து ரூ. 7.72லட்சம், 3 பைக்குகள், 3 செல்போன்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.