நித்திரவிளை: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை கோவில்வளாகம் பகுதியை சேர்ந்தவர் கிளாரன்ஸ் மகன் லெரன்சோ (26). கடந்த ஜூலை 28ம் தேதி ஓமன் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று, மஸ்கட் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். சக மீனவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லெரன்சோ நேற்று இறந்தார்.