குமரி: கன்னியாகுமரி இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கைதான சதாசிவம் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சென்னையில் சதாசிவம் கைதான நிலையில் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வன ஊழியர் ஆறுமுகம், அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கில் இதுவரை 11பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி சப்ளை செய்த சதாசிவம் என்பவர் கைது செய்யப்பட்டார்.