கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும் என்ற எச்சரிக்கையால் 4 வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்ல எந்த தடையும் இல்லை.