நாமக்கல்: குமாரபாளையத்தில் சாக்கடை கால்வாய் வழியாக சாயக்கழிவை வெளியேற்றியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய கழிவு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது, காவேரி நகர், கல்லாங்காட்டுவலசு, குப்பாண்டா பாளையம், கோட்டைமேடு, பல்லக்காபாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது.