நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் பாறையின் இடையே கப்பலுடன் சிக்கிய நீராவி உற்பத்திக் கலன் மீட்கப்பட்டுள்ளது. 19 நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கைக்கு பின் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் நீராவி உற்பத்தி கலன் மீட்கப்பட்டுள்ளது. ஒரு நீராவி உற்பத்திக் கலன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நீராவி உற்பத்திக் கலனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.