சென்னை: ‘பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ராஜிவ் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் ஜெயக்குமார் எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் டில்லி பாபு, கவுன்சிலர்கள் சுரேஷ். கீர்த்தி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜோதியை வரவேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
கருப்பு பணம் எவ்வாறு உருவாகிறது என்று மோடிக்கு தெரியவில்லை. பெரிய பணக்காரர்கள் யாரிடமும் ₹2000 நோட்டு இல்லை சிறு வியாபாரிகள் நடுத்தர வாசிகள் மட்டுமே சிறு தொகையாக ₹2000 இருக்கிறது. ₹2000 நோட்டு செல்லாது என அறிவித்ததற்கு காரணம் என்ன. நாட்டை சீரழிவு பாதையில் கொண்டு செல்கிறார் மோடி. நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை.