சென்னை: கிருஷ்ணகிரி ஓசூரில் 3ம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட்களுக்கு வழங்க 20MLD கொள்ளளவு கொண்ட ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. சிப்காட் சார்பில் பள்ளிகளுக்கு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்கவும் நிதியுதவி அளித்தார்.