Sunday, June 16, 2024
Home » யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் விபரீதம்: பெண் உயிரிழப்பு… கணவரிடம் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் விசாரணை..!!

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் விபரீதம்: பெண் உயிரிழப்பு… கணவரிடம் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் விசாரணை..!!

by Nithya

கிருஷ்ணகிரி: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான பெண்ணின் கணவரிடம் வருவாய் கோட்டாட்சியர் பாபு விசாரணை நடத்தி வருகிறார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். சிறு வயதில் இருந்தே லோகநாயகி, மாதேஷ் ஆகியோர் இயற்கை முறையில் விளையும் பொருட்களை மட்டுமே உண்டு வந்தனர். தனது தோட்டத்தில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி சேர்க்காமல் இயற்கை முறையில் விளைந்த நெல், காய்கறிகளை விளைவித்து அவற்றை மட்டுமே உண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணமான 2 ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்த லோகநாயகிக்கு பிரசவ நேரம் வந்தபோது அனுமந்தபுரம் கிராம செவிலியரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறிவிட்டு லோகநாயகியும், அவரது கணவரும் தாய் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இயற்கை முறையிலேயே பிரசவம் பார்க்கப்பட வேண்டும் என லோகநாயகி கேட்டுக்கொண்டதின் பேரில் கணவன் மாதேஷ் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கணவர் பிரசவம் பார்த்துள்ளார். சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் நச்சுக்கொடி வெளியே வராமல் தொடர்ந்து ரத்து போக்கு ஏற்பட்டுள்ளது. சிறு நேரத்தில் நச்சுக்கொடி வெளியே வந்துவிடும் என்று காத்திருந்த நிலையில் லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் லோகநாயகி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். புளியப்பட்டி செவிலியர் பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோட்டாட்சியர் வருவாய்த்துறை அதிகாரி பாபு நேரில் சென்று லோகநாயகி கணவர் மாதேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi