Tuesday, May 7, 2024
Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது விற்கும் தாபாக்கள் சந்துக்கடைகளுக்கு சீல்-கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது விற்கும் தாபாக்கள் சந்துக்கடைகளுக்கு சீல்-கலெக்டர் உத்தரவு

by Lakshmipathi

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்துக்கடைகள், மது விற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, கள்ளச்சாராய ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்து அமலாக்க பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் விற்பனை மேலாளர், மதுபான கடைகள் திறக்கும், மூடும் நேரங்கள் சரியாக பின்பற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு அருகே, அனுமதியின்றி மதுபானக் கூடங்கள் செயல்படுகிறதா, திறந்த வெளியில் மது குடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு, தனிநபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக மதுவகைகள் விற்பனை செய்யக் கூடாது. இது தொடர்பாக அனைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும், தாபா ஓட்டல்களில் மது விற்பனை, மதுகூடங்கள் செயல்பட வாய்ப்பு உள்ளதால், அனைத்து தாபா ஓட்டல்களின் விவரங்களை சேகரித்து, மதுவிலக்கு போலீசார் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் 119 டாஸ்மாக் கடைகளில் விற்பனை விவரத்தை சேகரித்து, விற்பனை குறைவாக உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்துக்கடைகள், மது விற்பனை செய்யும் தாபாக்களுக்கு சீல் வைத்து, உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு அனுமதி பெறாத மதுபான கடைகளை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை, தயாரிக்கும் நபர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் 63740 00754 (கலால் டிஎஸ்பி) எண்ணில் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு கள்ளச்சாரயம் குறித்து தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஆர்டிஓ பாபு, உதவி ஆணையர்(ஆயம்) சுகுமார், கலால் டிஎஸ்பி சிவலிங்கம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi