கிருஷ்ணகிரி: பால்சுணை கிராமத்தில் இறந்த இருளர் இனத்தைசேர்ந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருளர் இனத்தை சேர்ந்த வேலு என்பவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊர் வழியாக உடலை எடுத்துச்செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மயானத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.