Monday, June 10, 2024
Home » கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் மோதலில் பட்டியலின மக்களின் வீடு புகுந்து தாக்குதல்: காயமடைந்த 10 -பேர் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் மோதலில் பட்டியலின மக்களின் வீடு புகுந்து தாக்குதல்: காயமடைந்த 10 -பேர் மருத்துவமனையில் அனுமதி

by MuthuKumar

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200-க்கும் மேற்பட்ட மற்ற சமுகத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சோக்காடி கிராமத்தில் ஊர் பொதுவாக மாரியம்மன் கோயில் புணரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக கோயிலின் அறுகே கிரானைட் கற்கலை பாளீஸ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.

கிரானைட் கற்கல் பாளீஸ் செய்யும் போது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால், வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு பட்டியலின சமுகத்தை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் நிலவிய நிலையில் சோக்காடி பகுதியை சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும், பட்டியலின சமுகத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இருபிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டும், பட்டியலின மக்களின் வீடுகளில் கற்கலை கொண்டு தாக்கியும், அங்கிருந்த ஓலைகளுக்கு தீவைத்தும் தகராரில் ஈடுபட்டனர்.

இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையிலான ஏராளாமன போலீசார் சோக்காடி கிராமத்தில் குவிக்கபட்டு, இரு பிரிவினர் இடையேயும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்சனையை முடிவிக்கு கொண்டு வருவதற்காக இருபிரிவினர் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த நிலையில் ஒருபிரிவினர் பேச்சுவார்த்தைக்கு வராததால் மேலும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பட்டியலின சமுக மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தபட்ட காரணத்தினால் மாற்று சமுகத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோதலில் 8 பேர் காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

thirteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi