கோவை : மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த்! உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.