கொல்கத்தா: மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது கணினியில் இருந்து தகவல்களை எடுத்ததாக புகார் அளித்துள்ளனர். தனியார் நிறுவனத்தின் ஊழியர் அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.