இங்கிலாந்து: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டி விழா மே 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவரது உருவத்திலான நடனமாடும் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்டார் மன்னர் சார்லஸ் மே 6ம் தேதி அவருக்கு முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பக்கிங்காம் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பக்கிங்காம் அரண்மனை அருகே உள்ள கடைகளில் ராணி எலிசபெத் மன்னர் சார்லஸ் உருவத்திலான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கொரோனா தாக்கத்திலிருந்து இங்கிலாந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளாத நிலையில் இந்த முடிசூட்டுவிழா உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்களை இங்கிலாந்து நோக்கி அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.