சென்னை: கீழ்வெண்மணிக்கு ஆளுநர் ரவி சென்றது தேர்தலுக்கான நாடகம் என்று சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக ஆளுநர் போடும் வேடம் கீழ்வெண்மணி விஷயத்தில் எடுபடாது. கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சின்னத்தை சுற்றி மக்கள் குடிசையில் வசிப்பதாக ஆளுநர் கவலைப்படுகிறார். சென்னையில் குடிசைகளை அகற்றியபோது அங்கு வசித்த மக்களுக்கு தனது மாளிகை வளாகத்தில் ஆளுநர் இடம் தந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.