சென்னை : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கு வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதற்காக 88.52 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.