திருவனந்தபுரம்: சூடான் மோதல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். சூடானில் சிக்கியுள்ள கேரள மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். சூடானில் வாழும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மோடிக்கு பினராயி வலியுறுத்தியுள்ளார்.