திருவனந்தபுரம்: கேரள அரசு தலைமைச் செயலாளராக இருந்த ஜோய் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள வேணுவை நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எம்பிபிஎஸ் டாக்டரான இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள பூந்துறை ஆகும். இவரது மனைவி சாரதா முரளீதரனும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது கேரள உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். கேரள சட்டம், ஒழுங்கு டிஜிபியாக உள்ள அனில்காந்த் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக தீயணைப்புத் துறை தலைவர் ஷேக் தர்வேஷ் சாகிப்பை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1990ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.