டெல்லி: கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய நிதியை வழங்காமலும், கடன் வாங்க அனுமதி அளிக்காமலும் இருந்த ஒன்றிய அரசை எதிர்த்து கேரளா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சிறப்பு கடன் உதவி எவ்வளவு வழங்க முடியும் என்பதை நாளை காலை ஒன்றிய அரசு தெரிவிக்கவும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.