டெல்லி: கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கில் உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஒத்திவைத்தது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.