அகமதாபாத்: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விகளுக்கு குஜராத் பல்கலைக்கழகம் பதிலளிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பாக குஜராத் பல்கலைக் கழகம் தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து மோடியின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக குஜராத் பல்கலைக் கழகம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மே 23ம் தேதி இருவரும் நேரில் ஆஜராகும்படி அனுப்பப்பட்ட சம்மன் வரவில்லை என்று இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து ஜுன் 7ம் தேதி ஆஜராகும்படி இருவருக்கும் புதிய சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.