அமெரிக்கா: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெற வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கெஜ்ரிவால் வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது